பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

பொலிஸ் சிற்றுண்டிச் சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் பணிபுரியும் 50 வயதுடைய பெண் ஒருவரே பொலிஸ் அதிகாரியால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிற்கமைய சந்தேக நபரான குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version