ராஜஸ்தான் அணி 2வது Qualifier போட்டிக்கு தகுதி..! 

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் 2வது Qualifier போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றுக்கொண்டது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான Eliminator போட்டியில் 4 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதன் ஊடாக ராஜஸ்தான் அணி 2வது Qualifier போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. 

தரவரிசையில் முறையே 3ம், 4ம் இடங்களிலிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் அகமதாபாதில் இன்று(22.05) நடைபெற்ற 2வது Qualifier போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பெங்களூரு அணி சார்பில் ராஜட் பட்டிதர் 34 ஓட்டங்களையும், விராட் கோலி 33 ஓட்டங்களையும், லம்ரோர் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ராஜஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் அவேஷ் கான் 3 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

173 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களையும், ரியான் பராக் 36 ஓட்டங்களையும், ஹெட்மேயர் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பெங்களூரு அணி சார்பில் பந்துவீச்சில் சிராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்படி, Eliminator போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன்,  2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் 2வது Qualifier போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ராஜஸ்தான் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார். 

இன்றைய போட்டியில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் அணியும் 1வது Qualifier போட்டியில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணியும், எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது Qualifier போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் 1வது Qualifier போட்டியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணியை எதிர்க்கொள்ளவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version