நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்த தோட்டப்பகுதி மக்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று(26.05) நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனரமைப்பு பணிகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்போது கொட்டகலை பிரதேச சபை முன்னாள் தலைவர் ராஜமனி பிரசாந்த், இணைப்பு செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் வருகை தந்துள்னர்.