IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் கண்டியில் திறப்பு 

IDM Nations Campus International (IDMNC) கண்டியில் தனது கிளையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. கலாநிதி வி ஜனகனின் தலைமையின் கீழ், IDM பல்கலைக்கழகம் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் நோக்கில் பல்கலைக்கழக நடவடிக்கைகள் இவ்வாறு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் AIBT உடன் இணைந்து கண்டியில் ஏப்ரல் 25ம் திகதி அதன் கிளையை ஆரம்பித்தது. IDMNC சர்வதேச கண்டி பல்கலைக்கழகம் அனுபவம் வாய்ந்த கலாநிதி மோகன் பத்திரனாவால் வழி நடத்தப்படவுள்ளது

இதன் ஆரம்ப நிகழ்வானது கண்டி கிளையின் முகாமையாளர் தனுஜ மல்லிகாராச்சி மற்றும் அவரது குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்களின் பிரார்த்தனைகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது, இலங்கையின் கல்வி மற்றும் கலாச்சார விழுமியங்களை பிற நாடுகளுக்கு விரிவுபடுத்துவதில் கலாநிதி வி ஜனகன் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் உயர்தரக் கல்வியைத் தொடர்ந்து வழங்குவதுடன், தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தை பேணி பாதுகாக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

கல்வித்துறையிலுள்ள பரந்த அனுபவம் இந்த கூட்டு முயற்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என கலாநிதி மொஹான் பத்திரன தெரிவித்தார். பாடசாலை கல்வி முதல் முனைவர் பட்டம் வரையிலான கல்வியை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், கண்டியில் பல்வேறு துறைகளில் பரந்த அளவிலான திட்டங்களை வழங்குவதில் பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பையும் அவர் வலியுறுத்தினார்.

AIBT இன் பணிப்பாளர் லக்‌ஷிகா பத்திரன, பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் AIBT இன் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் கண்டியில் திறப்பு 

Social Share

Leave a Reply