விமான நிலையத்தில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டம் 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்துதல் மற்றும் கையாளுதல் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வெளியே உள்ள பகுதியில் சாரதிகள் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அத்துல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

வாகனங்களை நிறுத்தும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், விமானப் பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் அனைத்து வாகனங்களும் உரிய வாகன தரிப்பிடங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரமே விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு பிரவேசிக்க வேண்டும் எனவும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அத்துல கல்கெட்டிய தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version