ரயில் பாதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது 

புவக்பிட்டிய பகுதியில், ரயில் தண்டவாளத்தில் தனியார் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த சாரதி எம்பிலிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எம்பிலிப்பிட்டியவிற்கும் கொழும்பிற்கும் இடையில் இயங்கும் தனியார் பஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ரயில் தண்டவாளத்தில் பயணிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து குறித்த பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version