தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
அந்த பதிவில், “எங்களுக்கு நேற்று இரவு (02.06) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.