ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

ரயில் இயந்திர பொறியாளர் தொழிற்சங்கத்தை சேர்ந்த இரண்டு ரயில்வே பணிமனைகளில் கடமையாற்றும் ரயில் சாரதிகள் இன்று(06.06) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

பதவி உயர்வு வழங்கப்படாமை, ஆட்சேர்ப்பில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இவர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனால் நாளை(07.06) காலை கொழும்பு கோட்டையிலிருந்து எந்தவொரு ரயிலும் புறப்படாதென ரயில் இயந்திர பொறியாளர் தொழிற்சங்கத்தின் செயலாளர் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version