அதிகரிக்கப்பட்ட சம்பளத்தைப் பெற்றுக்கொண்ட பெருந்தோட்டத்தொழிலாளர்கள்

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 1700 நாளாந்த சம்பளம் முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (10.06) வழங்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் மொத்த நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக உயர்த்துவதற்கான வர்த்தாமானி கடந்த ஏப்ரல் மடாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

ஆனாலும், இலங்கை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் சம்பள அதிகரிப்புக்கு உடன்படப்போவதில்லை என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் வழங்கப்பட்டது.

Social Share

Leave a Reply