தபால் ஊழியர்கள் இன்று(12.06) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு ஆறாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.