குவைத்தில் 49 பேரை காவுக்கொண்ட தீ விபத்து

குவைத்திலுள்ள கட்டடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் இதுவரை 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

குவைத்தின் மங்காப் (Mangaf) நகரில் தொழிலாளர்கள் வசித்து வந்த கட்டடமொன்றில் இன்று (12.06) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் இந்தியர்கள் நால்வர் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply