டி20 உலகக்கிண்ணம்: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா

டி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுக்கொண்டது. அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக இந்தியா அணி சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்து கொண்டது. அமெரிக்கா, நியூயார்க்கில் இன்று(12.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. அமெரிக்கா அணி சார்பில் என்ஆர் குமார் 27 ஓட்டங்களையும், ஸ்டிவன் டெய்லர் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுக்களையும், ஹட்ரிக் பாண்டியா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

111 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 50 ஓட்டங்களையும், சிவம் துபே 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அமெரிக்கா அணி சார்பில் பந்து வீச்சில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், டி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version