தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்புக்கும் எச்சரிக்கை விடுத்த நாமல்    

தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றம் செய்யும் அரசியல்வாதிகள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமும், தமிழ் மக்களிடமும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வரும் கட்சிகள் மற்றும் அதற்கு எதிர்ப்பினை வெளியிடும் கட்சிகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கலாம் எனவும், தேர்தலுக்கு முன்னர் தமது கொள்கைகளை மாற்றம் செய்து கொள்பவர்கள் அரசியல் விளையாட்டை விளையாடுவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவளித்த கட்சிகள் தற்போது தங்களுடைய கொள்ளைகளில் மாற்றம் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்‌ஷ, கட்சிகளின் இரட்டை வேடம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version