பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நிதி இல்லை – கல்வி அமைச்சு 

ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட வட மத்திய மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிதி இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.   

ஆசிரியர் பரீட்சையினுடாக தெரிவாகியவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தினால் கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதாக இருந்தால், அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார். 

புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் நபர்களுக்கு சம்பளக் கொடுப்பனவுகளுக்காக 7000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தேவைப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version