வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரி அறிமுகம்

2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்துவதற்கு
சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

இலங்கையுடனான கடன் வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வின் பின்னர் வெளியிடப்பட்ட
அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டிற்குள் இந்த வரி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை,
இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த
பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்ளடி
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக அடுத்த வருடம் முதல் வாடகை வீடுகளுக்கான
வரியை அறிவிடும் யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version