இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் இலங்கைக்கு
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

“இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் கொழும்பு வருவார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, நிலத்தொடர்பு, மின் இணைப்பு, வங்கிகளுக்கு இடையேயான கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் பணியாற்றிவரும் பிரதமர் மோடியின் பயணத்திற்கு முன்னதான சில மதிப்பாய்வுகளை செய்யவதற்கு அவர் இலங்கைக்கு விஜயம்
மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version