அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றி
பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எல்பிட்டியவில் நேற்று (15.06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய கொள்வனவு முறைமைக்கமைவாக உயர்தர மருந்துகள் கொள்வனவு செய்யப்படுமென தெரிவித்த அமைச்சர் மருந்துகள்
தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.