வடமத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு நான்கு நாள் விடுமுறை

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல்
23 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம், ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம்,
வலசிங்ஹ ஹரிஸ்சந்த்ர வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், சாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம், தேவநம்பிய திஸ்ஸ வித்தியாலயம்,
நிவந்தகச்சேத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,மிஹிந்தலை வலயத்தின் மிஹிந்தலை மகா வித்தியாலயம், கம்மலக்குளம வித்தியாலயம்,
பத்திராஜ தென்னகோன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும்,
தந்திரிமலை வலயத்தின் விமலஞான வித்தியாலயத்திற்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பொசன் பண்டிகைக் காலத்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கான தங்குமிட
வசதிகளுக்காக இந்த பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதால் குறித்த பாடசாலைகளுக்கு மாத்திரம்
விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version