ஜேர்மனியில் இலங்கை நேரப்பபடி நேற்று அதிகாலை ஆர்மபித்த ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட தொடரில் நேற்று ஸ்பெய்ன், குரேசியா அணிகள் மோதின.
ஜேர்மனி, பெர்லின் இல் நடைபெற்றது. போட்டி ஆரம்பித்தது முதல் ஸ்பெய்ன் அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. 29 ஆவது நிமிடத்தில் மொராடா அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது. இரண்டாவது கோலை மிக விரைவாக பெபியன் ருய்ஸ் 32ஆவது நிமிடத்தில் சிறப்பான முறையில் பெற்றுக்கொடுத்தார். மூன்றாவது கோலை கர்வஜல் 44 ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொடுத்தார். போட்டி நிறைவடைய சில நிமிடங்கள் இருந்த வேளையில் குரேஷியா அணிக்கு முதலாவது கொலை பெற பெனால்டி வாய்ப்பு கிடைக்க பெட்கோவிச் தவறவிட்டத்துடன். அதே நிமிடத்தில் கோல் அடிக்க ஆப் சைட் என நடுவர் கூறினார்.