ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள
இடைக்காலத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே
முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.