அரை இறுதியில் இங்கிலாந்து

20-20 உலகக்கிண்ண தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது. அமெரிக்கா அணியுடன்நேற்று(23.06) நடைபெற்ற போட்டியில் அபார வெற்றி ஒன்றை பெற்றதன் மூலம் அரை இறுதிப் போட்டிக்குத தகுதி பெற்றது. அமெரிக்க அணி இரண்டாம் சுற்றில் சகல போட்டிகளிலும் தோல்வியடைந்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுமணி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். மேற்கிந்திய தீவுகள் அணியை இங்கிலாந்து அணி இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 4 புள்ளிகளோடு அடுத்த சுற்று வாய்ப்பை தனதாக்கியது.

இங்கிலாந்து, அமெரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய அமெரிக்கா அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களை பெற்றது. இதில் நிதிஸ் குமார் 30 ஓட்டங்களையும், கோரி அன்டேர்சன் 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்ரிஸ் ஜோர்டான் ஹட்ரிக் அடங்கலாக இறுதி ஓவரில் ஐந்து பந்துகளில் 4 விக்கெட்ளை கைப்பற்றினார். சாம் கரண், ஆதில் ரஷீட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைபப்ற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களை பெற்றது. இந்த அதிரடியே இங்கிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பபை பெற உதவியது. அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பில் சோல்ட் 25(21) ஓட்டங்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version