யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே மூவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர் இருவர் காயமடைந்துள்ளனர்.

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸொன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது அதே திசையில் வருகை தந்த லொறியொன்று பஸ்ஸின் பின்புறமாக நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் பஸ் மீது மோதியதில் வீதியில் நின்ற பயணிகள் மூவர் லொறியில் சிக்கி உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் பஸ் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version