பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

லோட்டஸ் வீதியில் இடம்பெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சுகயீன விடுமுறையை அறிவித்து ஆசிரியர் – அதிபர்கள் ஒன்றிணைந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (26.06) போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்தப் போராட்டம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கமைய கோட்டை நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டம் காரணமாக ஓல்கொட் மாவத்தை, லோட்டஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version