கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை (29.06 ) 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்
இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள்,
மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா
பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் நாளை காலை 09 மணி முதல் நள்ளிரவு
12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைத் தெரிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக
நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version