தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில்

எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தேர்தலுக்கான திகதி ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக இருப்பதாகவும், 2024ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இந்த தேர்தலுக்கு பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version