ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவை கோரியுள்ள தொழிலதிபர் 

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதி தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை, தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. 

இந்த மனுவின் காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கங்கள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் போது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத, அரசியலமைப்பில் ஏற்பட்ட தவறின் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தை சுமார் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கான சந்தரப்பங்கள் காணப்படுவதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் மனுவொன்றினுடாக உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version