நீர் விநியோகத் தடை

கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவ நகரசபை, கடுவெல நகரசபை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்தை
பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு
நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்று (04.07) இரவு 9 மணி முதல் நாளை (05.07)
பிற்பகல் 03 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு
காரணமாக இந்த நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version