நடன வகுப்பில் மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது  

நடன வகுப்பில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், நடன வகுப்பு ஆசிரியரொருவர் ஹங்வெல்ல பொலிஸாரினால் நேற்று(13.07) கைது செய்யப்பட்டுள்ளார். 

ரணால, படேவெல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் தலங்கம மற்றும் நவகமுவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

மேலும், குறித்த சந்தேக நபர் நடன வகுப்பிற்கு வந்த மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version