ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைத்தல் தொடர்பான மனு பரிசீலனைக்கு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (15.07) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இன்னும் முறையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி தனது மனுவில் கோரியிருந்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறும் அவர் கோரியிருந்தார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version