மூதூரில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கைப் பாலத்துக்கு அருகே இந்த நேற்று (19.07) மாலை விபத்து இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மூதூர் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.