அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களின் விபரங்களை ஆராய்ந்த பின்னர் உரிய குழுவினால் பயனாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் ஏனைய மாகாணங்களில் அதிகாரிகள் தரப்பில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முதற்கட்ட அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் சுமார் 18 இலட்சம் பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது.