கெஹலியவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 06 பேருக்கு விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று (25.07) முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் 08 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version