மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் இன்று அறிவிப்பு? 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று(29.07) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருக்கும் இடையில் நேற்றைய தினம்(28.07) சந்திப்பொன்று நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இன்று(29.07) வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version