கனடாவில் இருவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபானது, கனடாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் நேற்று (28/11) தகவல் வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் நைஜீரியாவுக்குச் சென்றிருந்த இருவர் மீதே ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஒன்டாரியோ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒமிக்ரொன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இருவரும் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இருவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version