இரத்தினபுரியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

இரத்தினபுரியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

இரத்தினபுரியில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு பதுளை மஹியங்கனை பொலிஸில் நிதிக் குற்றங்கள் தொடர்பான பல வழக்குகள் காணப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி நகரில் உள்ள தங்கப் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு வந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கு நகையை பெற்றுக்கொண்டு ஐந்தாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் செல்லுபடியாகும் ஐந்தாயிரம் ரூபா தாள்களை கடைக்காரரிடம் கொடுத்த போது அவை போலி நாணயத்தாள்கள் என தெரியவந்துள்ளது.

இவர் தனது வீட்டில் சில காலமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து வந்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version