
உலக உணவுத்திட்டத்திடமிருந்து இலங்கைக்கு உரம் கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் உரம் கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பலனே இந்த உரம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சிறு மற்றும் பெரும்போகத்திற்கு தேவையான உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.