
போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.