
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளமையால் மனசாட்சிப்படி செயற்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளவின் மரணத்திற்குப் பின்னர் அவர் அரசியலுக்குள் பிரவேசித்தார்.
தலதா அத்துகோரள, 2004, 2010, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அவர் பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.