
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு நாளை (25.08) அழைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரி நகரில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த தலதா அத்துகோரள தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த 21 ஆம் திகதி விலகினார்.
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளமையால் மனசாட்சிப்படி செயற்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளவின் மரணத்திற்குப் பின்னர் அவர் அரசியலுக்குள் பிரவேசித்தார்.
தலதா அத்துகோரள, 2004, 2010, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மேலும் இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காக அவர் பதவி விலகியதாக தகவல்கள் வெளியான
நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு தலதா அத்துகோரளவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.