ஜெய் ஷா ஐசிசியின் புதிய தலைவராக நியமனம்

ஜெய் ஷா ஐசிசியின் புதிய தலைவராக நியமனம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அடுத்த தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு ஒக்டோபர் முதல் இந்திய கிரிக்கெட்டின் செயலாளராகவும், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்த பதவிக்கு ஜெய் ஷாவின் பெயர் மாத்திரமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய பதவிக் காலத்தில் கிரிக்கெட் சர்வதேச அளவில் மேலும் பிரபல்யமடைய செய்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version