கப்பலுடன் மோதி படகு விபத்திற்குள்ளாகியதில் 3 மீனவர்கள் மாயம்

கப்பலுடன் மோதி படகு விபத்திற்குள்ளாகியதில் 3 மீனவர்கள் மாயம்

இலங்கையிலிருந்து 270 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகொன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.  

ஏழு நபர்களுடன் மீன் பிடிக்காகச் சென்ற படகு நேற்று(03.09) காலை விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

மற்றுமொரு மீன்பிடி படகு மூலம் விபத்துக்குள்ளாகிய படகிலிருந்து நான்கு மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும், மற்றைய மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன மீனவர்கள் 28, 43 மற்றும் 52 வயதுடைய அஹுங்கல்ல மற்றும் கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி துறைமுக பொலிஸார் மற்றும் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version