கிரிக்கெட் வீரர்களின் பயிற்சிகளை மேம்படுத்த ஆர்.பிரேமதாச மைதானத்தில் புதிய பிரிவு

கிரிக்கெட் வீரர்களின் பயிற்சிகளை மேம்படுத்த ஆர்.பிரேமதாச மைதானத்தில் புதிய பிரிவு

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைமையகத்தில் காணப்பட்ட மூளை மையத்தின் (Brain Centre), செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அதனைக் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலுள்ள உயர் செயல்திறன் மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

புதிதாக நிறுவப்பட்ட மூளை மையம் (Brain Centre) மேம்பட்ட கிரிக்கெட் பகுப்பாய்வு, திறமை மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான மையமாகச் செயல்படவுள்ளது. மேலும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல்கள் மற்றும் காணொளி பகுப்பாய்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளும் காணப்படுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால கிரிக்கெட் தரவுகள் இந்த மையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதன் காரணமாக, எதிர்கால போட்டிகளுக்கான பயிற்சிகளின் போது உரிய தரவுகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய மையமானது ஶ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உபதலைவர் ஜயந்த தர்மதாச, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த மற்றும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version