தியாகதீபம் திலீபனின் 37 ஆவது வருட நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரது திருவுருவ படத்திற்கு இன்று (15.09) சுடர் ஏற்றி முதல் நாள் திலீபன் வாரத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில் மலர்மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபன் உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார்.
திலீபனின் 37 வது நினைவேந்தலை முன்னிட்டு அவர் உண்ணாவிரம் (இன்று 15ஆம் திகதி) ஆரம்பித்த நாளை திலீபன் வாரமாக அறிவித்து நினைவேந்தல்கள் இடம்பெற்று வந்தன.
இதனடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.