தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு?

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு?

கடந்த 15ம் திகதி நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வாட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  

அநுராதபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குருநாகல் – அலவ்வ பகுதியில் மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியர் ஒருவரால், பரீட்சை வினாத்தாளுக்கு நிகரான வினாத்தாள் வாட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் இன்று (17.08) உரிய விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version