தேர்தலுக்காகக் கொழும்பு – காங்கேசன்துறை இடையே விசேட ரயில் சேவை

தேர்தலுக்காகக் கொழும்பு - காங்கேசன்துறை இடையே விசேட ரயில் சேவை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையே விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தேர்தல் பணிகளில் பங்கேற்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த ரயில்களில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும்(19.09) நாளை மறுதினமும்(21.09) காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை குறித்த விசேட ரயில் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது.

நாளை(20.09) மற்றும் எதிர்வரும் 22ம் திகதிகளில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 2 விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் நடைபெறும் 21ம் திகதி வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் ரயில்கள் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தூரச் சேவை ரயில்கள் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், குறுகிய தூரங்களுக்கான ரயில் சேவைகள் குறைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version