விருப்பு வாக்கை சரியாக அளிப்பது எப்படி – ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

விருப்பு வாக்கை சரியாக அளிப்பது எப்படி - ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

ஜனாதிபதித் தேர்தலில் தனது விருப்பு வாக்கை சரியாகக் குறிப்பிடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.

ஒரு வேட்பாளருக்கு தனது வாக்கை அளிக்கவும், அதனைத் தொடர்ந்து ஏனைய இரு வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்கையும் அளிக்கமுடியும்.

நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால், வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தின் முன் பகுதியில் ‘1’ என்ற எண்ணைக் குறிக்க வேண்டும்.

அதன்பின்னர் ‘2’ மற்றும் ‘3’ என்ற எண்களைக் குறியிட்டு, தனக்கு விருப்பமான ஏனைய வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்கை அளிக்கலாம் .

மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் விருப்புத் தேர்வுகள் நிராகரிக்கப்படும்

  1. எந்த வேட்பாளருக்கும் எந்த வாக்கும் குறிக்கப்படாதபோது
  2. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு தவறான முறையில் வாக்குகள் குறிக்கப்படும் போது.

03.ஒரு வேட்பாளருக்கு ‘1’ மற்றும் மற்றொரு வேட்பாளருக்கு ‘X’ குறிக்கப்பட்டால் அது செல்லுப்படியற்ற வாக்காக மாறும்.

04.இரண்டாவது விருப்பம் அல்லது மூன்றாவது விருப்பம் மட்டுமே குறிக்கப்படும் போதும் செல்லுப்படியற்ற வாக்காக மாறும்.

05.வாக்காளரை அடையாளப்படுத்த ஏதாவது எழுதுவது அல்லது வரைதல்

06.’2′ மற்றும் ‘3’ ஆகியவை ‘1’ தவிர வேறு ஒரு குறியுடன் முன்னுரிமையாகக் குறிக்கப்படும் போது

07.வாக்குகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் 1, 2, 3க்கு மேல் குறிக்கப்படும் போது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version