நேபாளத்தில் வெள்ளம் காரணமாக 101 பேர் பலி

நேபாளத்தில் வெள்ளம் காரணமாக 101 பேர் பலி

நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 69 பேர் காணாமற் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காத்மாண்டுவில் 200 இற்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ள நீலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழைக் காலத்தில் தெற்காசியா முழுவதும் பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழமையானது என்றாலும் காலநிலை மாற்றம் அவற்றின் தீவிரத்தை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காத்மாண்டில் சனிக்கிழமை காலை முதல் 24 மணி நேரத்தில் 240 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழச்சி பதிவானதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version