புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – திருத்தப் பணிகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு - திருத்தப் பணிகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30.09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள் அன்றி 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்பாகவே வௌியாகி இருந்ததெனவும், அந்தப் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version