பரீட்சை மோசடிகள் – 473 பெயர்கள் வெளியீடு

பரீட்சை மோசடிகள் - 473 பெயர்கள் வெளியீடு

மோசடிகளை மேற்கோள்காட்டி பரீட்சைகள் திணைக்களத்தை முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் தேர்வு தொடர்பான மோசடியில் ஈடுபட்டோரின் பெயர்களை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

தேர்வு தொடர்பான பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 473 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் எந்த தேர்விலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளும் பட்டியலில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியது
அவசியமானது என ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version