பொதுத் தேர்தல் – 74 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

பொதுத் தேர்தல் - 74 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள்
நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களால் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக மொத்தம் 46 பேரின் வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 28 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான தேர்தல் அதிகாரி பிரசன்ன ஜனக குமார தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version